tamilni Recovered 5 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கிய சரக்கு கப்பல் தொடர்பில் புதிய தகவல்

Share

இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கிய சரக்கு கப்பல் தொடர்பில் புதிய தகவல்

அவுஸ்திரேலியாவில் இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கியுள்ள சரக்கு கப்பலில் இருந்து மொத்த ஆடு மாடுகளையும் வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் எதிர்வரும் வாரங்களில் இன்னொரு கப்பலில் அந்த ஆடு மாடுகளை அடைத்து இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MV Bahijah என்ற அந்த சரக்கு கப்பலில் 16,000 ஆடு, மாடுகள் ஏற்றப்பட்டு சுமார் நான்கு வாரங்கள் கடந்துள்ளது. இந்த நிலையில் அந்த மிருகங்களை நடத்தும் விதம் கொடூரமானது என்று ஆர்வலர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

ஜனவரி 5ம் திகதி இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் அந்த கப்பல் புறப்பட்டுள்ளது. ஆனால் ஹவுதிகள் செங்கடல் பகுதியில் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருவதை குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் கப்பலை திரும்ப அழைத்துள்ளனர்.

தற்போது அவுஸ்திரேலியாவில் வெப்ப அலை வீசி வரும் சூழலில், அந்த கப்பல் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது. இதனிடையே, சில விலங்குகளை இறக்கி விட்டு, மீதமுள்ளவற்றை ஆப்ரிக்காவைச் சுற்றி, சுமார் 33 நாட்கள் பயணித்து இஸ்ரேலுக்கு அனுப்ப அனுமதிக்குமாறு ஏற்றுமதியாளரின் கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் திங்களன்று மறுத்துள்ளது.

ஆனால் தற்போது விலங்கு நல ஆர்வலர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்று, அந்த கப்பலில் இருந்து மொத்த விலங்குகளையும் வெலியேற்றி, உரிய பரிசோதனைக்கு பின்னர் இன்னொரு கப்பலில் இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவாகியுள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் இருந்து ஆடு மாடுகளுடன் ஜோர்தானுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் ஒன்றும் ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக பயணத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...