OIP 12
உலகம்செய்திகள்

உயிர் உறையும் குளிர்… விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த இளைஞர்: பதறவைக்கும் சம்பவம்

Share

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்ஜீரியா நாட்டில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு பிரான்ஸின் பாரிஸ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த நிலையில் தொழில்நுட்ப சோதனைகளின் போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த இளைஞரை மீட்டுள்ளனர். அந்த இளைஞருக்கு வெறும் 20 வயதிருக்கலாம் என்றும், ஏர் அல்ஜீரி விமானமானது அல்ஜீரியாவின் ஓரான் நகரத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தொடர்புடைய இளைஞரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர். அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே மீட்கபட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் சுமார் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும் போது வெப்பநிலை -50 C முதல் -60 C வரையில் சரிவடையலாம் என்றும், அதுபோன்ற மிக மோசமான நிலையை, விமான சக்கரத்தில் ஒளிந்து பயணிக்கும் நபர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

1947 முதல் 2020 வரையில் உலகெங்கும் இதுபோன்று 128 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் FAA என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் 75 சதவிகித பயணிகள் மரணத்தை தழுவியதாகவே கூறப்படுகிறது.

2019ல் இதுபோன்று விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த ஒருவர், பறக்கும் விமானத்தில் இருந்து சடலமாக தென்மேற்கு லண்டனில் ஒருவரது வீட்டு தோட்டத்தில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது பாரிஸ் நகர விமான நிலையத்தில் மீட்கப்பட்ட இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரது நிலை தொடர்பில் மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...