11 23
உலகம்செய்திகள்

இலங்கை ஏதிலிக்கு எதிராக இந்திய நீதிமன்றின் வார்த்தை பிரயோகம் : கண்டிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

Share

இலங்கை தமிழ் ஏதிலி ஓருவருக்கு எதிராக, இந்திய உயர் நீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தைகளை, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

இது, மனிதாபிமானமற்ற மற்றும் சட்டப்பூர்வமாக பொருத்தமற்ற வார்த்தை பிரயோகம் என்று, கட்சியின் தமிழக மாநில செயலாளர் பி. சண்முகம், விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், மனுதாரர், இலங்கைக்குத் திரும்பினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் காரணம் காட்டி, இந்தியாவிலேயே தொடர்ந்து தங்க அனுமதி கோரியிருந்தார்.

இலங்கை ஏதிலிக்கு எதிராக இந்திய நீதிமன்றின் வார்த்தை பிரயோகம் : கண்டிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி | Communist Party Condemns Against Sri Lankan

எனினும் இதன்போது, நீதியரசர்கள் கூறிய கருத்துக்கள் இரக்கமற்றவை மட்டுமல்ல, நீதித்துறை நடத்தையின் சட்ட எல்லைகளையும் மீறியவை என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.

மனுவை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.

எனினும், ஏதிலி அந்தஸ்து மற்றும் குடியுரிமை தொடர்பான விடயங்கள் அரசாங்கக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன, அவை நீதித்துறை விருப்பப்படி அல்ல என்றும் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா ஒரு பொது ஓய்வு இல்லம் அல்லது தங்குமிடம் அல்ல என்ற, அமர்வின் கருத்தையும், மனுதாரர் வேறு நாட்டிற்குச் செல்லலாம் என்ற பரிந்துரையையும் குறிப்பிட்டுள்ள சண்முகம், அவை மனித கண்ணியத்தின் கொள்கைகளுக்கு பொருந்தாதவை என்று கூறியுள்ளார்.

இலங்கை ஏதிலிக்கு எதிராக இந்திய நீதிமன்றின் வார்த்தை பிரயோகம் : கண்டிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி | Communist Party Condemns Against Sri Lankan

எந்தவொரு நீதிமன்றத்துக்கும், ஒருவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்ல உரிமை இல்லை.

ஒருவர் இந்தியாவில் தங்கலாமா வேண்டாமா என்பதை அது தீர்மானிக்கலாம், ஆனால் அதற்கு அப்பால் செல்வது சட்டபூர்வமானதோ மனிதாபிமானமோ அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்திய தலைமை நீதியரசர், இந்த விடயத்தில் தலையிட்டு, எதிர்கால நடவடிக்கைகளில் அத்தகைய மொழி இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...