24 65bb24d6ab848
உலகம்செய்திகள்

வாடகை வீட்டின் படுக்கை அறையில் ரகசிய பேனா கேமரா.., உடை மாற்றுவதை வீடியோ எடுத்த உரிமையாளரின் மகன்

Share

வாடகை வீட்டின் படுக்கை அறையில் பேனா கேமரா வைத்து பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த வீட்டின் உரிமையாளர் மகனை பொலிஸார் கைது செய்தனர்.

சென்னை ராயபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை தனது படுக்கை அறையில் புதிதாக ஒரு பேனா இருப்பதை மனைவி பார்த்தார். அதனை எடுத்து ஆய்வு செய்த போது பேனா கேமரா என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வீட்டிற்கு வந்து பேனா கேமராவை பார்த்த கணவர் அதில் தனது மனைவி உடை மாற்றும் வீடியோக்கள் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டாவது தளத்தில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மகன் இப்ராஹிம், படுக்கை அறையில் பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் இப்ராஹிம் பெண்களுக்கு தெரியாமல் கேமரா மூலம் வீடியோக்களை எடுத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர், இப்ராஹிமை பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த கேமராவையும் பறிமுதல் செய்தனர்.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...