3 5 scaled
உலகம்செய்திகள்

சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை!

Share

சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் தொடுத்தது.

ஆனால், இருநாடுகளும் சமரசத்திற்கு வந்து தங்கள் தூதரக உறவை மீண்டும் தொடங்குவதாக கூட்டாக அறிவித்தன.

இந்த நிலையில், ஈரானின் சிஸ்டான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சரவான் நகரில் 9 பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என பாகிஸ்தான் தூதர் முகமது முடாஸிர் திப்பி அடையாளம் காட்டியதன் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர், ”சரவனில் 9 பாகிஸ்தானியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த குடும்பங்களுக்கு தூதரகம் முழு ஆதரவை வழங்கும். இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பை வழங்க ஈரானுக்கு அழைப்பு விடுத்தோம்’ என எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...