23 2
இலங்கைஉலகம்செய்திகள்

ஷேக் ஹசீனா செய்த பெரும் தவறு : ரணில் சுட்டிக்காட்டு

Share

ஷேக் ஹசீனா செய்த பெரும் தவறு : ரணில் சுட்டிக்காட்டு

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina), முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவை நீண்ட காலத்திற்கு முன்பே சிறையிலிருந்து விடுவித்திருந்தால், இன்னும் நாட்டின் பிரதமராக இருந்திருப்பார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

எனினும் தற்போது காலிதா ஷியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாக ரணில் கூறினார்.

இதற்கிடையில், நிதி நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவ முன்வந்ததால், தற்போது நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனாவுக்கு ரணில் விக்ரமசிங்க தமது நன்றிகளை தெரிவித்தார்.

இலங்கைக்கு உண்மையில் பணம் தேவைப்படும்போது அவர் 200 மில்லியன் டொலர்களை வழங்கியதால், அவரை, தாம் இன்னும் நினைவில் வைத்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை பங்களாதேஷில் அமைதி நிலவும் என்று நம்புவோம் என்று அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...