download 7 1 14
உலகம்செய்திகள்

நிலவில் தரையிறங்கும் முதல் தனியார் விண்கலம்!

Share

நிலவில் தரையிறங்கும் முதல் தனியார் விண்கலம்!

தனியார் நிறுவனத்தின் விண்கலம் ஒன்று நிலவில் தரையிறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பானைச் சேர்ந்த ‘ஐஸ்பேஸ்’  என்ற தனியார் நிறுவனமே ‘ஹகுடோ-ஆர் மிஷன் 1’ என்ற திட்டத்தின் மூலம் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

‘ஹகுடோ-ஆர்’ விண்கலம் கடந்த டிசம்பர் மாதம் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு கடந்த மாதம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததுள்ளது.

அந்த  வகையில், இந்த விண்கலத்தில் ஐக்கிய அமீரகத்தின் ‘ரஷீத்’ரோவர் உள்ளது. அதனால் இந்த ரோவர் நிலவில் தரையிறங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்ளஉள்ளது.

தற்போது நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் ‘ஹகுடோ-ஆர்’ விண்கலம் நிலவை சுற்றி வருகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட  ‘ஐஸ்பேஸ்’ நிறுவனம், நிலவுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை வழங்க  திட்டமிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இதற்கு முன்னர்  முன்பு நிலவில் தனியார் விண்கலங்கள் எதுவும் தரையிறங்கவில்லை என்பதுடன் நிலவில் தரையிறங்கவுள்ள  முதல் தனியார் விண்கலம் என்ற சாதனையையும் இது  படைக்கவுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...