3333 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றும் லேபர் கட்சி: தோல்வி முகத்தில் அமைச்சர்கள்

Share

பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றும் லேபர் கட்சி: தோல்வி முகத்தில் அமைச்சர்கள்

பிரித்தானியாவில் பெருவாரியான ஆசனங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியை நோக்கி லேபர் கட்சி முன்னேறுவதாக தகவல் வெளிவருகிறது.

இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் லேபர் கட்சி 187 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், ரிஷி சுனக்கின் கனசர்வேட்டிவ் கட்சி 32 ஆசனங்களுடன் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமுள்ள 650 ஆசனங்களில் 326 ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியானது ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், லேபர் கட்சி 400 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றே இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு வருவார் என்றே தெரிய வருகிறது. Holborn மற்றும் St Pancras தொகுதியில் தமது வெற்றியை பதிவு செய்துள்ள கெய்ர் ஸ்டார்மர், மாற்றம் இங்குதான் தொடங்குகிறது… நாம் செயல்பட வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.

ரிஷி சுனக் அமைச்சரவையில் பாதுகாப்புச் செயலராக இருந்த கிராண்ட் ஷாப்ஸ் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Reform UK கட்சியின் தலைவர் Nigel Farage முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். முன்னாள் லேபர் கட்சி தலைவரான Jeremy Corbyn வெற்றி கண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...