முடிவுக்கு வரும் கனேடிய பிரதமரின் திருமண வாழ்வு
உலகம்செய்திகள்

முடிவுக்கு வரும் கனேடிய பிரதமரின் திருமண வாழ்வு

Share

முடிவுக்கு வரும் கனேடிய பிரதமரின் திருமண வாழ்வு

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மற்றும் அவரது பாரியார் ஸோபெய் கிரகரி ட்ரூடோ பிரிந்து வாழத் தீர்மானித்துள்ளனர்.

18 ஆண்டு திருமண வாழ்வின் பின்னர் அர்த்தபூர்வமானதும், கடினமானதுமான உரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒருவர் மீது ஒருவருக்கு பரஸ்பர மரியாதை காணப்படுவதாகவும், ஆழமான அன்பு தொடர்வதாகவும்,பிள்ளைகளின் நலனைக் கருத்திற் கொண்டு தங்களது அந்தரங்க உரிமையை மதிக்குமாறு ட்ரூடோ தம்பதியினர் கோரியுள்ளனர்.

விவாகரத்திற்கான ஆவணங்களில் ட்ரூடோ தம்பதியினர் கையொப்பிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் பியே ட்ரூடோவின் புதல்வரான ஜஸ்ரின் ட்ரூடோ தொலைக்காட்சி பிரபலமான ஸோபெய் கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி கரம் பிடித்தார்.

கனடாவில் பதவியில் இருக்கும் போதே விவகாரத்தினை அறிவித்த இரண்டாவது பிரதமராக ஜஸ்ரின் ட்ரூடோ கருதப்படுகின்றார்.

இதற்கு முன்னர் டரூடோவின் தந்தை பியே ட்ரூடோவும் பதவி வகித்த காலத்திலேயே விவகாரத்தை அறிவித்தார்.விவகாரத்திற்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அடுத்த வாரம் இருவரும் ஒன்றாக விடுமுறையை கழிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...