4 10 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு மீட்டதாக சொல்கின்றனர் – ஹமாஸ்

Share

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு மீட்டதாக சொல்கின்றனர் – ஹமாஸ்

இஸ்ரேல் அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு அங்கு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அல்ஸிபா மருத்துவமனையில் ஆயுதங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் படங்களை வெளியிட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டவேளை எந்த ஊடகமும் அங்கு காணப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினர் ஆயுதங்களை கொண்டுவந்து அவற்றை மருத்துவமனையில் வைத்துவிட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர் என்பதை நிராகரிக்க முடியாது என ஹமாஸின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளுக்கு அழுத்தம் கொடுத்து  காசாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவீச்சுகள்ள முற்றுகை தாக்குதல் போன்றவற்றால் காசாவில் 25 மருத்துவமனைகள் செயல் இழந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ்தான் மருத்துவமனைகளுக்குள் இருந்து செயற்படவில்லை என தெரிவித்துள்ளது.

இரண்டுதரப்பு தெரிவிப்பதையும்உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவிக்கின்றது.

Share
தொடர்புடையது
tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...