tamilni 360 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

Share

ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும்வரை போர் தொடரும் எனவும் அவர் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் யூதர்களுக்கு எதிராக செயற்பட்ட ஹிட்லரின் நாசிப்படை தளபதிகள், ஈரான் நாட்டு அணுசக்தி விஞ்ஞானிகள், பாலஸ்தீன தலைவர்கள் என பலரை வெளிநாடுகளில் வைத்து மொஸாட் உளவாளிகள் கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில் ஹாமாஸ் தலைவர்கள் பலர் கட்டார், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தபடி இயங்கிவருவதாகவும் அவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை தற்போது நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அதில் தாமதம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...