24 662eb8b26719e
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நகர்வை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும்

Share

இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நகர்வை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும்

காசா எல்லைப் பகுதியில் உள்ள ரஃபா நகரின் மீது இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதலை அமெரிக்காவால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும் என பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் சிறப்புக் கூட்டத்தில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஃபா மீது தாக்குதல் முடிவைக் கைவிடும்படி இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுறுத்தக் கேட்டுக்கொண்டார்.

ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அப்பகுதியில் இருந்து ஏராளமான பாலஸ்தீனர்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்றும், அது பாலஸ்தீன வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றும் மெஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க இறுதி திட்டமாக ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...