rtjy 261 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது

Share

ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ராக்கெட்டுக்கள் தாமாகவே தயாரித்திருக்க கூடும் என நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 07.10.2023 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய 5000 ராக்கெட்டுகள் வீச்சு தாக்குதலே காஸாவில் நடந்து வரும் போரின் துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

அவ்வாறான நிலையில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் பார்வையை மீறி வெளிநாடுகளில் இருந்து காசாவுக்குள் ராக்கெட்டுகளை கொண்டு வர சாத்தியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அப்படியானால் காசாவுக்குள்ளேயே தங்களுக்கு தேவையான “கசாம்” என்றழைக்கப்படும் ராக்கெட்டுகளை ஹமாஸ் போராளிகள் உருவாக்கி இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ராக்கெட்டுகளின் மூலப் பொருட்களில் முதன்மையானது, வீடுகளில் பயன்படுத்தப்படும் சீனி மற்றும் அடுத்தபடியாக கடைகளில் உரமாக கிடைக்கும் பொட்டாஷியம் நைட்ரேட் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ராக்கெட் உந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனி மற்றும் உரத்தை சேர்த்த பின்பு தீயை மூட்டினால் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றலுடன் ஆக்ஸிஜன் வாயு கலந்து பின் அதினால் பிறப்பிக்கப்படும் சக்தி ராக்கெட் வேகமாக வானில் பறந்து செல்ல உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தபடியாக ஹமாஸ் போராளிகள் சாதாரண தண்ணீர் குழாய்களை கொண்டு ராக்கெட்டின் உடற்பகுதியை உருவாக்கி இருக்கிறார்கள் என குறிப்பிடப்படுகிறது.

அந்த குழாய்க்குள் யூரியா நைட்ரேட்டையும் டி.என்.டி.(T.N.T) வெடி பொருளையும் கலந்தது மட்டுமன்றி வெடிக்கும் போது சுற்றியுள்ள பலர் பலியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆணிகளையும் பால் பேரிங்குகளையும் கலந்திருப்பார்கள் என நம்பப்படுகிறது.

இலகுவாக மடக்கக் கூடிய ஏவுதளத்தில் விரும்பிய கோணத்தில் வைத்து ஏவப்படும் கசாம் ராக்கெட்டுகளில் வழிகாட்டு மின்னணுக் கருவிகள் இல்லை. இதனால் அவை எங்கே சென்று விழும் என்பது யாருக்கும் தெரியாது.

எனினும், இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான செலவினமே இருக்கின்றமையினால் கசாம் ராக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் தயார் செய்து ஏவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் மறுபுறம் இந்த ராக்கெட்டுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் பல நூறு கோடிகளை செலவிட வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இஸ்ரேல் வசம் உள்ள அயர்ன் டோம் ராக்கெட் தடுப்பு அமைப்பில் பயன்படுத்தும் ஏவுகணை ஒவ்வொன்றின் விலையும் 1கோடி ரூபாய்க்கும் மேல் என இராணுவ தளபாட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...