rtjy 261 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது

Share

ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ராக்கெட்டுக்கள் தாமாகவே தயாரித்திருக்க கூடும் என நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 07.10.2023 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய 5000 ராக்கெட்டுகள் வீச்சு தாக்குதலே காஸாவில் நடந்து வரும் போரின் துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

அவ்வாறான நிலையில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் பார்வையை மீறி வெளிநாடுகளில் இருந்து காசாவுக்குள் ராக்கெட்டுகளை கொண்டு வர சாத்தியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அப்படியானால் காசாவுக்குள்ளேயே தங்களுக்கு தேவையான “கசாம்” என்றழைக்கப்படும் ராக்கெட்டுகளை ஹமாஸ் போராளிகள் உருவாக்கி இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ராக்கெட்டுகளின் மூலப் பொருட்களில் முதன்மையானது, வீடுகளில் பயன்படுத்தப்படும் சீனி மற்றும் அடுத்தபடியாக கடைகளில் உரமாக கிடைக்கும் பொட்டாஷியம் நைட்ரேட் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ராக்கெட் உந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனி மற்றும் உரத்தை சேர்த்த பின்பு தீயை மூட்டினால் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றலுடன் ஆக்ஸிஜன் வாயு கலந்து பின் அதினால் பிறப்பிக்கப்படும் சக்தி ராக்கெட் வேகமாக வானில் பறந்து செல்ல உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தபடியாக ஹமாஸ் போராளிகள் சாதாரண தண்ணீர் குழாய்களை கொண்டு ராக்கெட்டின் உடற்பகுதியை உருவாக்கி இருக்கிறார்கள் என குறிப்பிடப்படுகிறது.

அந்த குழாய்க்குள் யூரியா நைட்ரேட்டையும் டி.என்.டி.(T.N.T) வெடி பொருளையும் கலந்தது மட்டுமன்றி வெடிக்கும் போது சுற்றியுள்ள பலர் பலியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆணிகளையும் பால் பேரிங்குகளையும் கலந்திருப்பார்கள் என நம்பப்படுகிறது.

இலகுவாக மடக்கக் கூடிய ஏவுதளத்தில் விரும்பிய கோணத்தில் வைத்து ஏவப்படும் கசாம் ராக்கெட்டுகளில் வழிகாட்டு மின்னணுக் கருவிகள் இல்லை. இதனால் அவை எங்கே சென்று விழும் என்பது யாருக்கும் தெரியாது.

எனினும், இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான செலவினமே இருக்கின்றமையினால் கசாம் ராக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் தயார் செய்து ஏவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் மறுபுறம் இந்த ராக்கெட்டுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் பல நூறு கோடிகளை செலவிட வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இஸ்ரேல் வசம் உள்ள அயர்ன் டோம் ராக்கெட் தடுப்பு அமைப்பில் பயன்படுத்தும் ஏவுகணை ஒவ்வொன்றின் விலையும் 1கோடி ரூபாய்க்கும் மேல் என இராணுவ தளபாட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...