உலகம்செய்திகள்

4 மணிநேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல்! வெள்ளை மாளிகை அறிவிப்பு

Share

ஹமாஸ் பணயக்கைதிகளை வெளியேற்றுவதற்கான போரில், நான்கு மணிநேர இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தினசரி இடைநிறுத்தங்களை நிறுவுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதல்களில், தினசரி நான்கு மணிநேர மனிதாபிமான இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஹமாஸ் பணயக்கைதிகளை வெளியேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இஸ்ரேல் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு இடைநிறுத்தத்தின் நேரமும் மூன்று மணிநேரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும் எனவும், அவை இன்று தொடங்கும் எனவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதிப்படுத்தினார்.

Share
தொடர்புடையது
உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...