6 3
உலகம்செய்திகள்

சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்த கனடா

Share

சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்த கனடா

கனடாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி வழங்கப்படும் என கனடா அரசு தீர்மானம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இந்த தீர்மானம் இந்த செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடா அரசு முன்னெடுக்கவுள்ள இந்த தீர்மானம் கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே என புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியுள்ளார்.

எனினும், குறித்த தீர்மானம் சர்வதேச மாணவர்களை பொருளாதார ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாக்குவதாக கனடாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வகையில், இந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றுள்ள நீவா (Neeva Phatarphekar) என்னும் மாணவி, இதுவரை வராம் ஒன்றிற்கு 40 மணி நேரம் வேலை செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் தனது செலவுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வரும் நிலையில், கனடா அரசு முன்னெடுக்கவுள்ள இந்த புதிய கட்டுப்பாடு தன்னை போன்ற மாணவ மாணவியரை மேலும் கடுமையாக பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...