1 3
இலங்கைசெய்திகள்

2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..!

Share

2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..!

2024 ஜூலையில் மொத்தமாக 28,003 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) புதிய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 175,163 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு சென்றுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இந்த காலப்பகுதியில் 3,710.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை பணியாளர்கள் அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பு ஆகும், இந்த காலப்பகுதியில் 171,864 பேர் வெளிநாட்டில் வேலைக்காக சென்றுள்ளனர் மற்றும் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 3,363.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டுக்கு சென்றமை பதிவாகியுள்ளன.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...