6 14
உலகம்செய்திகள்

விமான நிலையங்கள் மீது பாகிஸ்தானின் தாக்குதல்..இந்தியாவின் அதிரடி நகர்வு

Share

இந்தியாவின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபோரா விமான தளத்தின் மீது பாகிஸ்தான் நடத்த முற்பட்ட ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவம் ஸ்ரீநகர் மற்றும் தென் காஷ்மீரின் அவந்திபோரா விமான தளத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது.

இருப்பினும், இந்தியா தனது அதிநவீன வான்வழி பாதுகாப்பு அமைப்புக்கள் மூலம் இந்த முயற்சியை வெற்றிகரமாக தடுத்து விட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை, ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பல இடங்களில் வெடிப்பு சத்தங்கள் எழுந்துள்ளன.

அத்துடன், சைரன் ஒலியும் ஒலிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்தடையும் நடைமுறைபடுத்தப்பட்டது.

இந்த தாக்குதல் கடந்த மூன்று நாட்களில் பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பாரிய முயற்சியாகும்.

வெள்ளிக்கிழமை மட்டும் இந்தியாவிலுள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்ரீநகர், பரமுல்லா, ஜம்மு, நாக்ரோட்டா, பத்தான்கோட், ஜைசல்மேர், பார்மர் உள்ளிட்டவை அடங்கும்.

கடந்த சில நாட்களில் 36 இடங்களில் பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களை இந்திய இராணுவம் தடுத்து, பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

பாகிஸ்தான் பக்க எல்லைப் பகுதிகளில் மூன்று நாட்களாக மோதி தாக்குதல் மற்றும் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் – ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து பல்வேறு வழிகளில் இந்திய இராணுவ கட்டிடங்களை குறிவைத்து தாக்க முயன்றாலும், இந்தியா அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

அதேவேளை, பாதுகாப்பு காரணமாக இந்தியா தற்காலிகமாக 24 விமான நிலையங்களை மே 150ஆம் திகதி காலை வரை மூடியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...