tamilni 553 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் – மோடியால் திறந்து வைப்பு

Share

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் – மோடியால் திறந்து வைப்பு

இந்தியாவின் மிக நீளமான கேபிள் ஸ்டேட் பாலமான சுதர்சன் சேது பாலம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பாலமானது இன்று (25.2.2024) இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் 979 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள இந்த பாலம் தான் இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் என தெரிவிக்கப்படுகின்றது

குஜராத்தில் உள்ள துறைமுக நகரமான ஓகாவையும் பயத் துவாரகா தீவையும் இணைக்கும் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கி.மீ. பயட் துவாரகா தீவில் உள்ள கிருஷ்ணருக்கு கட்டப்பட்ட புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...