tamilnirr 1 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

இந்திய வீரர்களை வெளியேற்ற மாலைதீவு ஜனாதிபதி காலக்கெடு

Share

இந்தியா தனது இராணுவ வீரர்களை மாலைத்தீவில் இருந்து விலக்கிக்கொள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி முகமது முய்ஸு காலக்கெடு விதித்துள்ளார்.

இதன்படி தனது நாட்டிலிருந்து இந்திய படையினர் 2024 மார்ச் 15க்கு முன்னர் வெளியேறவேண்டும் என்று முகமது முய்ஸு காலக்கெடு விதித்துள்ளார்.

சீனாவுக்கு தனது முதல் அரசு பயணத்தை மேற்கொண்டு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த காலக்கெடுவை மாலைதீவு ஜனாதிபதி விதித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி இந்தியா தனது இராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதி முய்ஸ முறைப்படி கேட்டுக் கொண்டதாக மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுக் கொள்கை செயலாளரான அப்துல்லா நஜிம் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இந்திய இராணுவ வீரர்கள் மாலைத்தீவில் தங்க முடியாது. இது அரச தலைவர் முகமது முய்சுவின் கொள்கை மற்றும் இந்த நிர்வாகத்தின் கொள்கை என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மாலைதீவும் இந்தியாவும் படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட மையக் குழுவை அமைத்துள்ளன.

இந்த குழு தனது முதல் கூட்டத்தை இன்று காலை மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் நடத்தியது.

இதனையடுத்தே இந்திய படையினரை விலக்கிக்கொள்ளும் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...