rtjy 280 scaled
உலகம்செய்திகள்

ஹிஸ்புல்லாஹ் படைக்கு எச்சரிக்கை

Share

ஹிஸ்புல்லாஹ் படைக்கு எச்சரிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இராணுவப் படை தவறிழைக்க கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக எச்சரித்துள்ளார்.

இரண்டு வாரமாக தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீன மக்கள் இதுவரை 4,600 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு அமெரிக்க நிர்வாகம் முழு ஆதரவளித்து வருவதுடன் ஆயுதங்களையும் குவித்து வருகிறது. இதனால் பாலஸ்தீன பகுதியில் உயிரிழப்பு வீதம் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையான ஹிஸ்புல்லாஹ் களமிறங்கக் கூடும் என்ற தகவல் கசிந்து வருகின்ற நிலையில் லெபனான் எல்லையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாஹ் படைகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்த நிலையிலேயே ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாஹ் களமிறங்கினால் அது வாழ்நாள் தவறாக அமையும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தினரிடம் பேசும்போது, அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் களமிறங்கினால், லெபனான் மீது இஸ்ரேலின் பதிலடி உக்கிரமாக இருக்கும் எனவும், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பேரழிவாக இருக்கும் எனவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் நெதன்யாகு அச்சமடைகின்றாரா என்ற கேள்வியும் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆபத்தான அமைப்பு என்றே குறிப்பிட்டு தடை செய்துள்ளது.

Share
தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...