ரஷ்யாவின் மிரட்டலை மீறி உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறிய முதல் சரக்கு கப்பல்! வெளியான தகவல்
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் மிரட்டலை மீறி உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறிய முதல் சரக்கு கப்பல்! வெளியான தகவல்

Share

ரஷ்யாவின் மிரட்டலை மீறி உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறிய முதல் சரக்கு கப்பல்! வெளியான தகவல்

உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், அந்த நாட்டின் மிரட்டலையும் மீறி உக்ரைன் துறைமுகத்தில் இருந்து முதல் சரக்கு கப்பல் வெளியேறியுள்ளது.

உக்ரைனின் தெற்கு துறைமுகமான ஒடெசாவில் இருந்து தொடர்புடைய சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். கருங்கடல் வழியை பயன்படுத்தும் எந்த கப்பலும் தங்கள் கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகும் என்றே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதுவே அப்பகுதியில் புதிய சிக்கலை ஏற்படுத்தும் சூழலையும் உருவாக்கியது. இந்த நிலையில் ஹொங்ஹொங் நாட்டைச் சேர்ந்த Joseph Schulte என்ற சரக்கு கப்பல் புதன்கிழமை பகல் புறப்பட்டு சென்றதாக உக்ரைன் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 16ம் திகதிக்கு பின்னர் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறும் முதல் சரக்கு கப்பல் இதுவென கூறுகின்றனர். மட்டுமின்றி, குறித்த கப்பலானது 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெளியேற முடியாமல் ஒடெசா துறைமுகத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.

மட்டுமின்றி, ரஷ்யாவால் அந்த கப்பலுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடை வழங்க உக்ரைன் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்த நிலையிலேயே, அந்த கப்பல் புறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த கப்பலானது துருக்கியை சென்றடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பின்னர், தானிய கிடங்குகள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகள் மீது தொடர் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது.

இதனிடையே, ருமேனிய எல்லைக்கு அருகிலுள்ள நதி துறைமுகத்தில் உள்ள தானிய கிடங்குகளை ரஷ்ய ட்ரோன்கள் சேதப்படுத்தியதாக ஒடெசா பிராந்தியத்தின் ஆளுநர் புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த விவகாரம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ருமேனியாவை கொந்தளிக்க வைத்துள்ளது. தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர், உக்ரைன் தானிய ஏற்றுமதியானது ருமேனியா ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது Joseph Schulte என்ற சரக்கு கப்பல் சுமார் 30,000 டன் சரக்குடன் புறப்பட்டு சென்றுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் உக்ரைன் துறைமுகங்களில் சிக்கிக்கொண்ட 60 சரக்கு கப்பல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...