rtjy 228 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் திடீர் தாக்குதல்: இஸ்ரேல் தரையில் பதுங்கிய ஜேர்மன் பிரதமர்

Share

ஹமாஸ் திடீர் தாக்குதல்: இஸ்ரேல் தரையில் பதுங்கிய ஜேர்மன் பிரதமர்

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது, ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தரையில் பதுங்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் தாக்குதல் 13ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் அமைப்பினரை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினருடனான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்த நாட்டிற்கு சென்று இருந்த ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் கடந்த 17ம் திகதி நாடு திரும்புவதற்காக இஸ்ரேல் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பபட்டது.

இதனால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பிறகு அவர் விமானத்தில் ஜேர்மனிக்கு புறப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...