உலகம்செய்திகள்

காஸா மக்கள் இப்படியான நிலைக்கு தள்ளப்படுவார்கள்: எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

Share

காஸா மக்கள் இப்படியான நிலைக்கு தள்ளப்படுவார்கள்: எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக காஸாவில் பொதுமக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குளிர்காலம் நெருங்கி வருவதால், பாதுகாப்பற்ற மற்றும் நெரிசலான தங்குமிடங்கள் மற்றும் சுத்தமான தண்ணீர் இல்லாததால், பொதுமக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என முதன்மை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பல வாரங்களாக எச்சரித்து வரும் இந்த ஐ.நா அமைப்பு, ரொட்டி தற்போது பற்றாக்குறையாக இருப்பதாகவும் அல்லது இல்லாது போன்ற நிலை இருப்பதாகவும், எஞ்சிய உணவால் தற்போதைய பசி தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னொரு பாதுகாப்பான வழித்தடம் உருவாக்குவதால் மட்டுமே காஸா மக்களின் உணவு பற்றாக்குறையை போக்க முடியும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை எகிப்தில் இருந்து வந்த டிரக்குகள் போதிய எரிபொருள் இல்லாததால் பொதுமக்களை சென்றடைய முடியாமல் போனதாகவும், எரிபொருள் பற்றாக்குறையும் உணவு விநியோகத்திற்கு தடையாக இருப்பதாக ஐ.நா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

Share
தொடர்புடையது
tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...