எரிவாயு குழாய் வெடித்தது: இதுவரை 4 பேர் உயிரிழப்பு

Italy

எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியமையால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவமானது இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.

சிசிலி தீவில் உள்ள ரவனுசா நகரில், பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து லிப்டை பயன்படுத்தியதன் காரணமாக, வெளிப்பட்ட தீப்பொறி பட்டு காற்றில் குழுமியிருந்த எரிவாயு வெடித்துச் சிதறியது என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவத்தில் அருகில் இருந்த 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமையால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

#WorldNews

Exit mobile version