1 21
உலகம்

அச்சம் அதிகரிக்கும் சூழலில் மேக்ரானை சந்தித்த பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர்! நெருக்கடி குறித்து விவாதம்

Share

அச்சம் அதிகரிக்கும் சூழலில் மேக்ரானை சந்தித்த பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர்! நெருக்கடி குறித்து விவாதம்

வர்த்தகப் போருக்கு வாய்ப்புள்ளதாக பதற்றம் நிலவும் சூழலில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அவரது நடவடிக்கைகள் தொடர்பில் பல நாடுகள் பதற்றமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக வரி விதிப்புகளில் மாற்றம் கொண்டுவரப்பட்ட வர்த்தகப் போருக்கு வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.

இத்தகைய சூழலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பாரிஸில் சந்தித்துள்ளார்.

Champs Elyseesயில் உள்ள ஜார்ஜஸ் கிளெமென்சோவின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1944ஆம் ஆண்டு சர்ச்சிலுக்குப் பிறகு, பிரான்சில் போர் நிறுத்த தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முதல் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் ஆவார்.

தலைவர்கள் இருவரும், உக்ரைனின் நிலைமையை விவாதிப்பதன் மூலம் பேச்சுவார்த்தையை தொடங்கினர். குளிர்காலத்தில் உக்ரைனை வலிமையான நிலையில் வைப்பதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.

மத்திய கிழக்கு குறித்த பேச்சுவார்த்தையின்போது, காஸா மற்றும் லெபனான் நிலைமையில் ஆழ்ந்த கவலையை தலைவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் மேற்குக் கரையில் ஸ்திரத்தன்மை தேவை என வலியுறுத்தினர்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

l27920251216092836
உலகம்செய்திகள்

போண்டி கடற்கரைத் தாக்குதல்: தாக்குதலாளிகள் பரந்த குழுவின் பகுதியாக இல்லை; தனிநபர்களாகச் செயல்பட்டுள்ளனர் – அவுஸ்திரேலிய பிரதமர்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரசித்தி பெற்ற போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட...

23e066c0 1037 11f0 b0e1 2dd5aff43736.jpg
உலகம்செய்திகள்

உரையைத் திரித்துக் கூறியதாகக் கூறி பி.பி.சி. மீது டொனால்ட் ட்ரம்ப் $10 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழக்கு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டிஷ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) மீது 10 பில்லியன்...