5 22
உலகம்

ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா?

Share

ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா?

தொடர்ந்து நேட்டோ அமைப்பை விமர்சித்து வருபவரான ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வி பல நாடுகளின் தலைவர்களிடையேயும் காணப்படுகிறது.

ட்ரம்ப் தொடர்ச்சியாக நேட்டோ அமைப்பை விமர்சித்து வருவதுடன், ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்புக்கு குறைந்த அளவிலேயே செலவு செய்யும் நிலையில், அமெரிக்கா நேட்டோவின் பட்ஜெட்டுக்கு அளவுக்கு அதிகமாக நிதி ரீதியாக பங்களிப்பைச் செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வி மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

ஆனால், அமெரிக்கா நேட்டோவை புறக்கணிக்காது என தான் நம்புவதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான John Healey தெரிவித்துள்ளார்.

நேட்டோவுடனான கூட்டணி முக்கியமானது என்பதை அமெரிக்காவுக்குத் தெரியும் என்றும், ஐரோப்பாவுடன் முரண்பாட்டை தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார் John Healey.

அதே நேரத்தில், ஐரோப்பிய நாடுகள் நேட்டோவுக்கு நிதி வழங்கும் விடயத்தில் இன்னமும் அதிக பங்களிப்பைச் செய்யவேண்டும் என ட்ரம்ப் கூறுவது சரிதான் என்று கூறியுள்ள John Healey, தானும் அதே கருத்து தொடர்பில் விவாதித்துவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...