tamilni 203 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார்

Share

தமிழர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார்

தமிழர் ஒருவர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார் பெண்கள் மற்றும் சிறுமிகளை எச்சரித்துள்ளனர்.

குறித்த 10 பேரும் செயலிகளில் காணப்பட வாய்ப்பிருப்பதாகவும், அவர்களை கட்டாயம் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த நபர்களின் முகங்களை நினைவில் வைத்திருப்பதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Kevarnie Queen என்பவர் 22 துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி 16 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

Ilford பகுதியை சேர்ந்த 41 வயது சமீர் பட்டேல் 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்கு சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

Stanwell பகுதியை சேர்ந்த 32 வாயது ரதீசன் ரங்கநாதன் பல்வேறு துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி, 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

Forest Gate பகுதியை சேர்ந்த 39 வயது அஷ்ரப் கான் என்பவர் மீது இரண்டு வன்கொடுமை வழக்கு மற்றும் ஒரு துஸ்பிரயோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

Richmond பகுதியை சேர்ந்த 21 வயது David Berbers சமூக ஊடகத்தில் அறிமுகமான இளம் வயது சிறுமி ஒருவரை வன்கொடுமை செய்துள்ளார்.

தெற்கு க்ராய்டன் பகுதியை சேர்ந்த 47 வயது Clint Osbourne மற்றும் 29 வயதான Jamie Maggioni ஆகியோர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு லண்டன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...