china
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கையில் சீனாவின் ராடர் தளம்!!

Share

ராடர் தளமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்காக இந்த ராடர் தளத்தை சீனா இலங்கையில் அமைக்கவுள்ளது.

இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக பிரிட்டன் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்களின் ஆதாய நடவடிக்கையாக இந்த திட்டம் அமைந்துள்ளதென நிபுணர்களை கோடிட்டு குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ராடர் தளமானது மாத்தறை பகுதியில் தெவுந்தர முனைக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்திய கடற்பரப்பின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படை முகாம்கள், டியாகோ கார்சியாவிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்கு குறித்த ராடர் சீனாவிற்கு பெரிதும் பயன்படும்.

மேலும், இந்தியாவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒடிசாவிலுள்ள ஏவுகணை சோதனைத்தளம் ஆகியனவற்றையும் குறித்த ராடர் மூலம் அவதானிக்க முடியும்.

கடந்த ஆண்டுகளில் சீனா 180 இற்கும் மேற்பட்ட விண்வெளி கருவிகளை ஏவியுள்ளதுடன் இந்த வருடத்தில் 200 விண்வெளி கருவிகளை அனுப்பவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...