24 661182f78a2be
உலகம்செய்திகள்

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசொப்ட்

Share

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசொப்ட்

உலகம் முழுவதும் இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கபடுகின்ற நிலையில் சீனா தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு, பிரதானமாக இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெற உள்ள தேர்தல்களில் இடையூறு ஏற்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், மைக்ரோசொப்டின் அச்சுறுத்தலை கண்டறிவதற்கான நுண்ணறிவு குழு கூறும் தகவலின்படி, சீனாவின் சைபர் குழுக்கள், வடகொரியா தொடர்புடன், 2024ஆம் ஆண்டு நடைபெறும் பல்வேறு தேர்தல்களை இலக்காக கொண்டு செயற்படக் கூடும் என தெரியவந்துள்ளது.

அதன்போது, சீனாவானது, தங்களுக்கு சாதகம் ஏற்படும் வகையில், பொது மக்களின் கருத்துகளை மெல்ல சமூக ஊடகம் வழியே பரப்பி விடுவதற்காக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட செய்திகளை அள்ளி குவிக்குமென்று மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.

அத்துடன், சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகள் உலக மக்கள் தொகையில் கூட்டாக 49 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...