24 66120837d81e0
இலங்கைசெய்திகள்

சுகாதாரத் துறையினருக்கு மகிழ்ச்சித் தகவல்

Share

சுகாதாரத் துறையினருக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கையின் சுகாதாரத் துறையின் தாதியர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உத்தியோகபூர்வ ஆடைக் கொடுப்பனவான 15,000 ரூபா 10,000 ரூபா அதிகரிக்கப்பட்டு 25,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்திற்கான திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை மே மாதத்திலும் அடுத்த வருடத்திற்கான திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை அதே வருடம் மார்ச் மாதத்திலும் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலேரியா கட்டுப்பாட்டு உதவியாளர், பொது சுகாதார கள அலுவலர், பூச்சியியல் உதவியாளர், பற் சிகிச்சையாளர் பணியிடங்களுக்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 10,300 ரூபா முதல் 17,000 ரூபா வரை 6,700 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 14,000 ரூபா உதவித்தொகை 9,000 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 23,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கால்நடை தடுப்பூசி போடுபவர்கள் மற்றும் இளநிலை பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 9,300 ரூபா உதவித்தொகை 5,700 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...