rtjy 268 scaled
உலகம்செய்திகள்

கேமரூன் நாட்டில் கட்டிட விபத்து: 16 பலி

Share

கேமரூன் நாட்டில் கட்டிட விபத்து: 16 பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் தற்போது வரை 16 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவக்கின்றன.

கேமரூன் தலைநகா் யாவுண்டேயிலிருந்து 210 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய நகரமான டெளவாலாவில் நேற்றையதினம் (23.07.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டாா் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு மாடி கட்டடம் இடிந்து ஒரு சிறிய கட்டடத்தின் மீது விழுந்ததில், இடிபாடுகளுக்கு இடையே காயமடைந்தனா்.

‘மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை அதிகமாகக் கூடும்’ என அந்தப் பிராந்தியத்தின் ஆளுநா் தெரிவித்துள்ளார்.

டெளவாலா நகரில் தரம் குறைவாகக் கட்டப்பட்ட கட்டடடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அவ்வப்போது நேரிடுகின்றன.

மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளில் உள்ள கட்டடங்களை டெளவாலா நகர நிா்வாகம் தற்போது இடித்து வருகிறது. ஆனால், இப்போது இடிந்து விழுந்த நான்கு மாடி கட்டடம் அந்த அபாய பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...