3 21
உலகம்

குளிர்காலம் நெருங்கும் நிலையில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

குளிர்காலம் நெருங்கும் நிலையில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குளிர்காலம் நெருங்கும் நிலையில், பிரித்தானியர்கள் உடல் நலம் தொடர்பில் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குளிர்காலத்தில் வீடுகளில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று பூஞ்சை பரவலாகும். பூஞ்சைகளால் பலருக்கு பலவிதமான உடல் நலப் பிரச்சினைகள் உருவாகலாம்.

பூஞ்சையால் பிரச்சினை ஏற்பட்டு, பிறகு அதை சரி செய்வதற்கு எக்கச்சக்கமாக செலவு செய்வதைக் காட்டிலும், முன்கூட்டியே எடுக்கும் சில நடவடிக்கைகளால் அதை தவிர்க்கலாம் என்கிறார் Nancy Emery என்னும் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்.

வெளியே வானிலை குளிராகவோ மழையாகவோ இருந்தாலும், ஜன்னல்களை திறந்துவைப்பது நல்லது, அதே நேரத்தில் பூஞ்சை வளராமல் தடுப்பதும் அவசியம் என்கிறார் நான்சி.

ஆக, ஒரு நாளைக்கு சில முறை, குளித்த பிறகும், சமைத்தபிறகும், ஜன்னல்களை திறந்துவைப்பது, வீட்டுக்குள் காணப்படும் ஈரப்பதத்தை வெளியேற்ற மிகவும் உதவியாக இருக்கும்.

பூஞ்சைகள், வெதுவெதுப்பான மற்றும் ஈரமான சூழலில் நன்கு பரவக்கூடியவையாகும். ஆகவே, குளிர்காலத்தில் வீட்டை காற்றோட்டமாக வைப்பது நல்லது.

பூஞ்சை பரவலுக்குக் காரணமான சுமார் 75 சதவிகித ஈரப்பதத்தை, ஜன்னல்கள் முதலான ஈரம் படும் இடங்களை உடனடியாக துடைப்பதன் மூலம் தடுக்கலாம்.

அதேபோல, தண்ணீர் படும் இடங்களான குளியலறை, சமையலறையின் தரை, டைல்ஸ் போன்ற இடங்களையும் துடைத்து ஈரத்தை அகற்றுவது நன்மை பயக்கும்.

மேலும், அறை எப்படி இருந்தாலும், டைல்ஸில் படும் ஈரம், அவற்றை தரையில் பதிக்கவும், அவற்றுக்கிடையிலான இடத்தை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படும் கலவைக்குள் இறங்கி அங்கிருந்தும் பூஞ்சை உருவாக வாய்ப்புள்ளது என்கிறார் நான்சி.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...