tamilnif 20 scaled
உலகம்செய்திகள்

வடக்கு காசாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமர்

Share

வடக்கு காசாவில் தீவிரமான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அப்பகுதிக்கு திடீர் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இராணுவ தலைமை தளபதிகளுடன் சென்றிருந்த அவர் இராணுவ வீரர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது ஹமாஸ் படையினரை எதிர்த்து போரிட்டு வரும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மற்றும் தளதிகளுடன் பேசிய அவர், இறுதி வரை துணிவுடன் நின்று போராடுமாறும், அதற்கு தமது அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும், ” நான் கேட்டுக் கொள்வது எல்லாம் இதேபோல இறுதி வரை நீங்கள் போராட வேண்டும். உங்களைப் பற்றி நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.

எங்கள் இதயங்கள் உங்களுக்காகத்தான் துடிக்கின்றன. நீங்கள் குடும்பங்களை எல்லாம் விட்டு வந்து போர் செய்கின்றீர்கள். சிலர் உயிரையும் கொடுத்துள்ளீர்கள். நீங்கள்தான் உண்மையான தியாகிகள் ”என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவத்தில் வான்வழி தாக்குதல்களால் கடந்த 24 மணி நேரத்தில் 250 பேர் உட்பட இதுவரை 20,700 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...