tamilni 249 scaled
உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம் சுனக்கிற்கு கிடைத்துள்ள வெற்றி

Share

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம் சுனக்கிற்கு கிடைத்துள்ள வெற்றி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்கவைப்பதுதான் ருவாண்டா திட்டமாகும்.

புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர் வெளிநாட்டவர்கள் அச்சமடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என பிரித்தானியா கூறியுள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாக சட்டம் ஒன்றைக் கொண்டுவர ரிஷி சுனக் தலைமையிலான பிரித்தானிய அரசு கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், ருவாண்டா திட்டம் தொடர்பான சட்டமூலம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கீழவை முன் நேற்று முன்தினம்(12) முன்வைக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை பிரித்தானியாவின் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்த்து கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

எனினும், வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன் மூலம் சட்டமூலம் வெற்றி பெற்றுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இது பிரதமர் ரிஷிக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டுமானால், அது ஏழு கட்டங்களில் வெற்றிபெற வேண்டும். இந்நிலையில் முதல் கட்டத்தில் ரிஷி வெற்றிபெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

குறித்த சட்டமூலத்தில் சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவராவிட்டால், அடுத்தடுத்த கட்டங்களில் சுனக்கின் திட்டம் தோற்கடிக்கப்படும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....