Arrest Reuters 1548877115
இலங்கைஉலகம்செய்திகள்

ருமேனிய எல்லையில் 37 இலங்கையர்கள் கைது!

Share

பொருள்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டி ஒன்றின் உள்ளே ஒளிந்திருந்து எல்லை தாண்டி ஹங்கேரி நாட்டினுள் நுழைய முயன்ற 37 இலங்கையர்களை ருமேனிய பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை ருமேனியா-ஹங்கேரி இடையிலான நாட்லாக் – 2 (Nadlac II Border)) எல்லையில் இவர்கள் பிடிபட்டனர் என்று ருமேனிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ருமேனிய நாட்டவர் ஒருவர் தான் செலுத்தி வந்த ட்ரக் வாகனத்தைச் சோதனைக்காக எல்லை நுழைவிடத்தில் நிறுத்திவிட்டு ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

அச்சமயம் ருமேனியாவில் இருந்து இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற அந்த வாகனத்தின் உள்ளே மனிதர்கள் மறைந்திருப்பதை எல்லைக் காவல் படையின் மோப்ப நாய்கள் கண்டு பிடித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து வாகனத்தைச் சோதனையிட்ட காவலர்கள் உள்ளே இருந்து 37 பேரை மீட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று அதிகாரிகள் பின்னர் உறுதி செய்தனர். ஹங்கேரி வழியாக ஷெங்கன் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காகஇவர்கள் அவ்வாறு வாகனத்தின் உள்ளே ஒளிந்திருந்து பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் வேறு இரண்டு வாகனங்களில் இதே போன்று ஒளிந்து பயணித்த ஆசிய நாட்டவர்கள் உட்பட பல புகலிடக் கோரிக்கையாளர்களைருமேனிய எல்லைக் காவலர்கள் கண்டு பிடித்துக் கைது செய்துள்ளனர்.

இலங்கையர்களுடன் சேர்த்து மொத்தம் 70 பேர் எல்லையில் பிடிபட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் பங்களாதேஷ் நாட்டவர்கள் ஆவர். பங்களாதேஷ் நாட்டவர்கள் ருமேனியாவில் தொழில் புரிவதற்காக விசேட தொழில் வீஸா வழங்கப்படுகிறது. ஆனால் அந்த வீஸாவுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய ஷெங்கன் எல்லைக்குள் சட்டபூர்வமாகப் பிரவேசிக்க முடியாது.

தொழிலுக்காக என்று வீஸா பெற்று ருமேனியா வருகின்ற பலர் அங்கிருந்து சட்டவிரோதமான பயண வழிகள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அவர்களில் இலங்கையர்கள், துருக்கியர் எதியோப்பியர்கள், மற்றும் சிரிய நாட்டவர் ஆகியோரும்
அடங்குவர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...