2 8 scaled
உலகம்செய்திகள்

1 நிமிடத்திற்கு அடுத்தடுத்து 25 ராக்கெட் குண்டுகள்: இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்

Share

1 நிமிடத்திற்கு அடுத்தடுத்து 25 ராக்கெட் குண்டுகள்: இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்

வடக்கு இஸ்ரேல் பகுதி மீது லெபனான் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை காசாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு இஸ்ரேலிய பகுதி மீது லெபனான் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது.

ஒரு நிமிடத்திற்குள் சுமார் 25 ராக்கெட் குண்டுகளை வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது லெபனான் வீசியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மேலும் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் சாசா மற்றும் ஸ்தூலா குடியிருப்புகள் மீது விழுந்ததாகவும், தெற்கு லெபனானின் ஹெஸ்பொல்லா தளங்களில் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த தாக்குதலை லெபனான் செய்து இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், இந்த தாக்குதல் தொடரும் என லெபனான் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...