4 12 scaled
உலகம்செய்திகள்

டொலர் தேசமாக மாற இருக்கும் அர்ஜென்டினா..! துள்ளாட்டம் போட்ட புதிய பிரதமர்

Share

டொலர் தேசமாக மாற இருக்கும் அர்ஜென்டினா..! துள்ளாட்டம் போட்ட புதிய பிரதமர்

அர்ஜென்டினாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேவியர் மிலி தனது வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

அர்ஜென்டினா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வலதுசாரி லிபர்டி கட்சியை சேர்ந்த ஜேவியர் மிலி வெற்றி பெற்று நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ தகவல்படி ஜேவியர் மிலி 56 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது வெற்றியை அர்ஜென்டினா நாட்டின் புதிய பிரதமர் துள்ளல் ஆட்டம் போட்டு கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜேவியர் மிலி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அர்ஜென்டினாவில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஜேவியர் மிலி தனது தேர்தல் வாக்குறுதியில் இரண்டு முக்கிய உறுதியை வழங்கி இருந்தார், அதில் முதலாவது அர்ஜென்டினா இனி டொலர் தேசம், மற்றொன்று மத்திய வங்கி நீக்கம்.

அர்ஜென்டினாவின் தற்போதைய பணவீக்கம் 142 சதவீதமாக இருக்கும் நிலையில், அர்ஜென்டினாவின் பீசோ நாணயத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கி விட்டு அமெரிக்க டொலரை அதிகாரப்பூர்வ பணமாக ஜேவியர் மிலி அறிவிக்கயுள்ளார்.

இவை அர்ஜென்டினாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

மேலும் அர்ஜென்டினாவை டொலர் தேசமாக மாற்ற அந்த நாட்டின் மத்திய வங்கியை மூடுவதாகவும் ஜேவியர் மிலி தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....