image acfd8193e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரகரி வாவியில் விழுந்த நீர் விமானம் மீட்பு: கடும் சேதங்களுக்கு மத்தியில் கரைக்கு கொண்டு வரப்பட்டது!

Share

நுவரெலியா கிரகரி வாவியில் (Gregory Lake) கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane), பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நேற்று (09) மாலை 6 மணியளவில் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது.

நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஒன்றிணைந்து இந்த மீட்புப் பணியை முன்னெடுத்தனர்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பாரந்தூக்கிகள் (Cranes) மூலம் விமானம் வாவியிலிருந்து கரைக்குத் தூக்கி எடுக்கப்பட்டது.

நுவரெலியாவில் நிலவும் கடும் பனிமூட்டம், மோசமான வானிலை மற்றும் வாவியின் அடிப்பகுதியில் உள்ள அதிகப்படியான சேறு காரணமாக விமானத்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

விமானம் விபத்துக்குள்ளான போதும், பின்னர் அதனை மீட்கும் பணியின் போதும் அதன் கட்டமைப்புக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்துத் தீவிர விசாரணை நடத்துவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...