gagenthirakumar
செய்திகள்அரசியல்இலங்கை

அவதூறு பிரசாரத்தை ஏற்க முடியாது: கொள்கை வேறுபாடு இருந்தாலும் பிரதமருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கஜேந்திரகுமார்!

Share

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்களை, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (TNPF) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் ஹரிணி அமரசூரியாவுடனும், அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடனும் தமது கட்சிக்குக் கடுமையான கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

கொள்கை வேறுபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெண்ணாகவும் அமைச்சராகவும் அவருக்கு எதிராக நடத்தப்படும் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் கண்டிக்கத்தக்க” அவதூறு பிரசாரங்களுடன் தாம் ஒருபோதும் இணையப் போவதில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாடப் புத்தகத்தின் பயிற்சித் தொகுப்பில் (Module), பொருத்தமற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட இணையதள இணைப்பு ஒன்று தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில தரப்பினர் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் கல்வி அமைச்சருக்கு எதிராகத் தனிப்பட்ட ரீதியிலான அவதூறுகளைப் பரப்பி வந்தனர். இந்தச் சூழலிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

 

 

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...