24 662975082055f
உலகம்செய்திகள்

பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமி்ட்ட சிறுவன் கைது

Share

பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமி்ட்டசிறுவன் கைது

பாரிஸில் (Paris) நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளில்(Olympics) “வீர மரணம் அடைய விரும்புகிறேன்” என்று கருத்தினை தெரிவித்ததாக கூறப்படும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் “வீர மரணம் அடைய விரும்புகிறேன்” என்று கருத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் வெடிபொருள் அணிந்து தற்கொலை தாக்குதல் தாரராக மாறுவதற்கான திட்டத்தை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தற்கொலை தாக்குதல் கருத்தினை நேற்று முன்தினம்(23) டெலிகிராமில் பதிவிடப்பட்ட நிலையில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சிறுவனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இஸ்லாமிய அரசை ஆதரிப்பதாக சிறுவன் கையால் எழுதிய காகிதங்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்ப்புகளை தூண்டும் இந்த விளையாட்டு நிகழ்வுக்கு முன்னதாக அதிகரித்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் (Paris Olympics)உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஈர்க்கிறது, எனவே இது தாக்குதல்களுக்கான முதன்மை இடமாகவும் அமைந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சிறுவனின் வயது காரணமாக பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் அவரது பெயரை வெளியிடவில்லை என்பதுடன் பொலிஸ் பாதுகாப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை ஒழுங்குபடுத்தும் குழுவினர், அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...