24 6629814b73332
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் 1500 குடும்பங்கள்

Share

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் 1500 குடும்பங்கள்

யுத்தம் நிறைவுக்கு வந்து நீண்ட காலமாகியும் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் சுமார் 1512 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இவர்களில் சுமார் 10 குடும்பங்கள் இதுவரை தொடர்ச்சியாக நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குடும்பங்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் மாறி மாறி வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த 1512 குடும்பங்களைச் சேர்ந்த 4567 பேர் இதன் காரணமாக கடும் துயரங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இவ்வருட இறுதிக்குள் அவர்களை மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...