tamilni 297 scaled
உலகம்செய்திகள்

ஈரானிய எல்லைக்குள் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Share

ஈரானிய எல்லைக்குள் அமைந்துள்ள பலூச் பிரிவினைவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்ட இடங்களில் பாகிஸ்தானால் தேடப்படும் பலூச் பிரிவினைவாத அமைப்பினரின் மறைவிடங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்குள் தளங்களை அமைத்துள்ள பாகிஸ்தான் எதிர்ப்பு போராளிக் குழுக்களுக்கு எதிராக தாம் தாக்குதல்களை நடத்தியுள்ளதை பாகிஸ்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகமும் இந்த தாக்குதல்களை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது பெருமளவான பாகிஸ்தான் எதிர்ப்பு பிரிவினைவாத அமைப்பினர் கொல்லப்பட்டனர் என்றும் பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்குள், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தின் பதிலளிப்பதற்கான உரிமையை வலியுறுத்துவதாகவும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...