2 13 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர்

Share

இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர்

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை மீண்டும் சீனாவுக்கு பயணம் செய்த ஜிம் லுவாண்டா என்ற கப்பலை கடத்தியுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் வைத்து சிறைப்பிடித்தனர்.

மேலும் இரு தினங்களுக்கு முன்பு செங்கடல் பகுதிக்கு ரோந்துக்கு சென்ற அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஆளில்லாத ட்ரோன் தாக்குதலை ஹவுதி படையினர் முன்னெடுத்தனர்.

ஆனால் அமெரிக்க கடற்படை துரிதமாக செயல்பட்டு அத்தனை தாக்குதலுக்கு களமிறக்கப்பட்ட அனைத்து ட்ரோன்களையும் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.

கடத்தல் இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு செங்கடல் வழியாக பயணம் செய்த ஜிம் லுவாண்டா கொள்கலன் கப்பலை ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை கடத்தியுள்ளது.

இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான கடல் வழி முற்றுகையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னெடுக்கின்றனர் என்பது தெளிவாக தெரியவருகிறது.

ஹவுதி படையினரால் கடந்த 3 நாட்களில் கடத்தப்பட்ட அல்லது தாக்கப்பட்ட இஸ்ரேலுடன் தொடர்புடைய 3வது கப்பல் இதுவாகும்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...