3 13 scaled
உலகம்செய்திகள்

சீனாவில் பரவுவது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல… எச்சரிக்கை விடுத்த மருத்துவர்

Share

சீனாவில் பரவுவது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல… எச்சரிக்கை விடுத்த மருத்துவர்

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகள் நிரம்பிவரும் நிலையில், அது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல, பல வகை என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் நிமோனியாவின் உறுதி செய்யப்படாத பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிபுணர்கள் தரப்பு பீதியடைந்துள்ளனர். மட்டுமின்றி, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து வருவதை அடுத்து, ProMED அமைப்பால் ஏற்கனவே தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மர்ம காய்ச்சலுக்கு பல எண்ணிக்கையிலானோர் பதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இருமல் உள்ளிட்ட எந்த குறிப்பிடத்தக்க அறிகுறியும் இல்லை என்றும், ஆனால் தீவிரமான காய்ச்சல் மட்டுமே காணப்படுவதாக கூறுகின்றனர்.

சீனா தரப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், அசாதாரண சூழல் இல்லை என்றே உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, அக்டோபர் மத்தியில் இருந்தே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பெரும்பாலும் சிறார்களில் பரவும் இந்த மர்ம காய்ச்சலானது ஒரே ஒரு கிருமியல்ல எனவும், பல வகை நோய்க்கிருமிகள் காணப்படுவதாகவும் மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, உலக சுகாதார அமைப்பு இந்த மர்ம காய்ச்சல் தொடர்பில் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...