tamilni 288 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் வீரர்கள் சீருடையை தைக்க முடியாது: கேரள நிறுவனம் அதிரடி நடவடிக்கை

Share

இஸ்ரேல் வீரர்கள் சீருடையை தைக்க முடியாது: கேரள நிறுவனம் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க கேரளாவின் ஆடை தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரின் திடீர் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் முக்கிய தாக்குதல் குறியாக பாலஸ்தீனத்தின் காசா நகரம் அமைந்துள்ளது.

காசா நகரில் தான் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் காரணத்தால் இஸ்ரேல் ராணுவம் காசா மீது இடைவிடாத தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இதில் இதுவரை 2278 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் 9,700 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க கேரளாவின் ஆடை தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழிற்சாலையில் இயங்கி வரும் மரியன் அப்பாரல்ஸ் என்ற நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்திற்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடைகளை தைத்து வந்தது.

பாலஸ்தீனத்துடனான இஸ்ரேல் போரை தொடர்ந்து மரியன் அப்பாரல்ஸ் நிறுவனம் இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் 1 லட்சம் சீருடைக்கான ஆர்டர்ரையும் மரியன் அப்பாரல்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...