4 27 scaled
உலகம்செய்திகள்

சீன கப்பலுக்கு அனுமதி மறுப்பு; இந்தியாவுக்கு இலங்கை முக்கியத்துவம்

Share

சீன கப்பலுக்கு அனுமதி மறுப்பு; இந்தியாவுக்கு இலங்கை முக்கியத்துவம்

இந்தியாவுக்கு முக்கியம் கொடுத்து சீன ஆய்வுக் கப்பலான ‘சியான் 6’ இலங்கையில் நிலைநிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சீன ஆராய்ச்சிக் கப்பலான சியான் 6 (Shi Yan 6) இலங்கையில் நங்கூரமிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் சீனாவின் இராணுவத் தலையீடுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற இந்தியாவின் கவலைக்கு இலங்கை முக்கியத்துவம் அளிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கவலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். “சில விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா சில காலமாக தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா உட்பட பல நட்பு நாடுகளின் கருத்தைக் கேட்டேன். சில வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் எங்களுக்கு மிகவும் முக்கியம். இதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். பிராந்தியத்தில் அமைதியே எங்களுக்கு முக்கியம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதத்தில் சி யான் 6 எனும் சீன ஆய்வு கப்பலை இலங்கை கடற்கரையில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...