3 27 scaled
உலகம்செய்திகள்

முக்கிய அமெரிக்க சீக்கியர்கள் உயிருக்கு ஆபத்து: FBI எச்சரிக்கை

Share

முக்கிய அமெரிக்க சீக்கியர்கள் உயிருக்கு ஆபத்து: FBI எச்சரிக்கை

அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தில் முக்கியமான தலைவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எஃப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைந்தது 3 சீக்கிய தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ள FBI, இது கனேடிய சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் படுகொலைக்கு பின்னர் ஏற்படுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

திட்டமிடப்பட்ட இந்த படுகொலைக்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கலாம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரதமர் ட்ரூடோவின் அந்த குற்றச்சாட்டுகளுக்கு கனேடிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் ஒப்புதலும் இருந்துள்ளது.

ஆனால் இந்த சம்பவம் தற்போது கனடா மற்றும் இந்திய அரசுகளின் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய மண்ணில் சட்டத்திற்கு புறம்பாக இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட படுகொலையாகவே இந்த விவகாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்திய தரப்பில், கனடாவின் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்துள்ளதுடன், இது ஜோடிக்கப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நிஜ்ஜர் படுகொலைக்கு சில வாரங்கள் முன்னர், பிரித்தானியாவிலும் பாகிஸ்தானிலும், சீக்கிய தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்க சீக்கிய காக்கஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் பிரித்பால் சிங் தெரிவிக்கையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரும் மற்ற இரண்டு சகாக்களும் FBI அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், பிரித்பால் சிங் உட்பட அமெரிக்க சீக்கிய தலைவர்கள் மூவரின் உயிருக்கு ஆபத்து என கூறப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்புக்கு 3 நாட்களுக்கு பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வழிமுறைகளை முன்வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஜூன் 22ம் திகதி அமர்ஜித் சிங் என்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக FBI அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் நியூயார்க்கை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் வர்ணனையாளர் ஆவால். வாஷிங்க்டன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பும் வழியில், FBI அதிகாரிகள் இவரை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சில வாரங்களுக்கு பிறகு FBI அதிகாரிகள் நேரில் சந்தித்து விரிவான விளக்கமளித்துள்ளதாகவும் அவர் உறுதி செய்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் 6 பேர்கள் ஈடுபட்டதாகவும், மொத்தம் 50 தோட்டாக்கள் சுடப்பட்டதில் 34 எண்ணிக்கையில் நிஜ்ஜார் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இது திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட படுகொலை என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...