வழிபட கொடுத்த மதுபானத்தை குடித்த அமைச்சர்!! 
உலகம்செய்திகள்

வழிபட கொடுத்த மதுபானத்தை குடித்த அமைச்சர்!! 

Share

வழிபட கொடுத்த மதுபானத்தை குடித்த அமைச்சர்!!

குஜராத் அமைச்சர் ஒருவர் பழங்குடியின விழாவில் கொடுத்த மதுபானத்தை தவறுதலாக குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள டெடியாபடா தாலுகாவில் உலக பழங்குடி தினத்தை முன்னிட்டு பழங்குடியினர் சிறப்பு விழாவை நடத்தினர்.
இந்த விழாவானது பூமித்தாயை வணங்குவதற்காக நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் குஜராத் வேளாண் துறை அமைச்சர் ராகவ்ஜி பட்டேல், பாஜக எம்எல்ஏ மோதிலால் வாசவா, நர்மதா மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சங்கர் வாசவா மற்றும் சில கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பழங்குடியின சாமியார் சாவ்தூ வசவ காட்டு இலைகள், நெற் பயிர்கள், தேங்காய், பச்சை நிற கண்ணாடி பாட்டிலில் மதுபானம் ஆகியயவற்றை வழங்கினார்.
இதில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இலையால் செய்யப்பட்ட பச்சை நிற கோப்பையில் மதுபானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, விழாவில் கலந்து கொண்டவர்கள் மதுபானத்தை தரையில் ஊற்றினர்.
ஆனால், அமைச்சர் ராகவ்ஜி பட்டேல் மதுபானத்தை தவறுதலாக குடித்தார். உடனே, மோதிலால் மற்றும் சங்கர் இருவரும் அமைச்சரிடம் குடிக்க கூடாது என்று கூறினர்.
பின்பு, இலையினால் செய்யப்பட்ட கோப்பையை கீழே போட்டுவிட்டு இதனை நீங்கள் முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
அப்போது, மற்ற அனைவரும் அமைச்சரின் செயலை பார்த்து சிரித்தனர், தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
வீடியோ வைரலானதையடுத்து அமைச்சர் ராகவ்ஜி பட்டேல், “பழங்குடியினரின் பழக்கவழக்கங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. இது எனது முதல் வருகை. எங்கள் சடங்குகளில் எங்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும் போது, ​​​​நாங்கள் அதை பருகுவோம். அது போல தான் இத்தனையும் நினைத்தேன் ” என்று கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...