ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கூறி ஜேர்மானியர் கைது
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கூறி ஜேர்மானியர் கைது

Share

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கூறி ஜேர்மானியர் கைது

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அரசு அலுவலரான ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ தளவாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அலுவலகம் ஒன்றின் பணியாற்றிவந்த அந்த நபருடைய பெயர் தாமஸ் (Thomas H) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் Bonn நகரிலுள்ள ரஷ்ய துணை தூதரகம் ஆகிய இடங்களுக்கு தானே சென்ற தாமஸ், முக்கிய தகவல்கள் சிலவற்றை கையளித்துள்ளார்.
கைது, சோதனை, நீதிமன்றத்தில் ஆஜர்
மேற்கு ஜேர்மனியிலுள்ள Koblenz என்னுமிடத்தில் வைத்து தாமஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிசார் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டார்கள்.
நேற்று நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்ட தாமஸ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை துவங்க உள்ளது.
இப்படி ரஷ்யாவுக்காக உளவு பார்த்த முதல் ஜேர்மானியர் தாமஸ் அல்ல. ஏற்கனவே, ஜனவரி மாதம் ஆர்தர் E என்னும் ஜேர்மானியர் ரஷ்யாவுக்கு உளவுத்துறை தகவல்களைக் கையளித்ததாக கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன், ஜேர்மன் உளவுத்துறையில் பணியாற்றிய ஒருவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக டிசம்பரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பிருப்பதாக கருதப்பட்ட ஆர்தர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...