ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கூறி ஜேர்மானியர் கைது
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கூறி ஜேர்மானியர் கைது

Share

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கூறி ஜேர்மானியர் கைது

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அரசு அலுவலரான ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ தளவாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அலுவலகம் ஒன்றின் பணியாற்றிவந்த அந்த நபருடைய பெயர் தாமஸ் (Thomas H) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் Bonn நகரிலுள்ள ரஷ்ய துணை தூதரகம் ஆகிய இடங்களுக்கு தானே சென்ற தாமஸ், முக்கிய தகவல்கள் சிலவற்றை கையளித்துள்ளார்.
கைது, சோதனை, நீதிமன்றத்தில் ஆஜர்
மேற்கு ஜேர்மனியிலுள்ள Koblenz என்னுமிடத்தில் வைத்து தாமஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிசார் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டார்கள்.
நேற்று நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்ட தாமஸ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை துவங்க உள்ளது.
இப்படி ரஷ்யாவுக்காக உளவு பார்த்த முதல் ஜேர்மானியர் தாமஸ் அல்ல. ஏற்கனவே, ஜனவரி மாதம் ஆர்தர் E என்னும் ஜேர்மானியர் ரஷ்யாவுக்கு உளவுத்துறை தகவல்களைக் கையளித்ததாக கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன், ஜேர்மன் உளவுத்துறையில் பணியாற்றிய ஒருவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக டிசம்பரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பிருப்பதாக கருதப்பட்ட ஆர்தர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1759803512
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான யாழ்ப்பாண யுவதி தற்கொலை முயற்சி; சிகிச்சை பலனளிக்காமல் மரணம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற...

image cb0f8da672
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ தென் கொரியாவில் துணை சபாநாயகரைச் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்!

தென் கொரியாவுக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

1 32 1
செய்திகள்உலகம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு...

images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...